சிவாஜி புரடக்ஷனுக்காக அஜீத் நடிக்கும் படத்திற்குதான் முதலில் சுறா என்று பெயர் வைத்தார்கள். அதற்குப் பிறகு இயக்குனர் மாறியதால் சுறா அசல் ஆனது. இப்போது விஜய் நடிக்கும் ஐம்பதாவது படத்திற்கு சுறா என்று பெயர் வைக்க முடிவாகியிருக்கிறது.
இந்த டைட்டிலைத் தர மனசேயில்லையாம் அஜீத்திற்கு. சிவாஜி புரடக்ஷன்சிடம் பேசியவர், இந்த டைட்டிலில் நாமளே திரும்ப படம் பண்ணலாம் என்றாராம். விஜய் கேட்டால் மறுக்க முடியாமலும், அஜீத் பேச்சைத் தட்ட முடியாமலும் அவஸ்தைப்பட்ட ராம்குமார், இந்த டைட்டிலை சொன்னவர் அஜீத். அவரிடமே கேளுங்களேன் என்று ஒதுங்கிக்கொண்டாராம்.
பிறகென்ன? ரொம்ப பிரெண்ட்லியாக அஜீத்திடம் பேசிய விஜய், டைட்டிலைக் கைப்பற்றிவிட்டார். ஆனாலும் விஜய் டைப் படங்களுக்கு சுறாங்கிற டைட்டில் பொருத்தமா இருக்காதே என்று அக்கறையோடு கவலைப்படுகிறாராம் தல.
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
copy king vijay...
title-a kuda vida maatiran...
Post a Comment